பெல்ஜியம் நாட்டு அஞ்சல் துறை முன்னெப்போதும் இல்லாத பணிச்சுமையில் சிக்கித்தவிப்பு - தினமும் 6 லட்சம் பேருக்கு பொருட்கள் பட்டுவாடா
Dec 2 2020 8:40PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கொரோனா வைரஸ் காரணமாக ஏராளமானோர் உணவு மற்றும் இதரப் பொருட்களை இணையவழியில் வாங்குவதால், பெல்ஜியம் நாட்டு அஞ்சல் துறை முன்னெப்போதும் இல்லாத பணிச்சுமையில் சிக்கித்தவிக்கிறது. இதற்காக கூடுதலாக 2 ஆயிரம் இலகுரக வாகனங்களை இயக்கத் தொடங்கிய அஞ்சல் துறை, 3 ஆயிரம் தற்காலிக பணியாளர்களை நியமித்துள்ளது. தினமும் இரண்டு முறை பொருட்களை பட்டுவாடா செய்யும் நிலையில், நாளொன்றுக்கு 6 லட்சம் பேருக்கு பொருட்கள் அனுப்பப்படுவதாக அஞ்சல் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.