பிரிட்டன் பொதுமக்களின் அச்சத்தைப் போக்க முயற்சி - தொலைக்காட்சி நேரலையில் தடுப்பூசி போட அரசு முடிவு
Dec 2 2020 8:43PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
பொதுமக்களுக்கு நம்பிக்கையூட்டும் விதத்தில், பிரிட்டன் சுகாதாரத்துறை அமைச்சர் Matt Hancock, தொலைக்காட்சி நேரலையில் கொரோனா தடுப்பூசி பேட்டுக்கொள்ள முடிவெடுத்துள்ளார். உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவி வரும் நிலையில், முதல் நாடாக, ஃபைசர் பையான்டெக் நிறுவனத்தின் புதிய தடுப்பூசிக்கு பிரிட்டன் அனுமதியளித்துள்ளது. இருப்பினும், புதிய தடுப்பூசி குறித்து பொதுமக்களிடையே சந்தேகமும், அச்சமும் நிலவி வருகிறது. இதையடுத்து, தொலைக்காட்சி ஒன்றின் வேண்டுகோளுக்கு இணங்க, பிரிட்டன் சுகாதாரத்துறை அமைச்சர் Matt Hancock, நேரடி ஒளிபரப்பின் போது தடுப்பூசி போட்டுக்கொள்ள முடிவெடுத்துள்ளார்.