பிரிட்டனில் கொரோனா தடுப்பூசி யாருக்கும் கட்டாயப்படுத்தி போடப்படாது என அரசு அறிவிப்பு
Dec 2 2020 8:48PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கொரோனா தடுப்பூசிக்கு உலகிலேயே முதல் நாடாக அனுமதியளித்துள்ள பிரிட்டனில், யாருக்கும் கட்டாயப்படுத்தி ஊசி போடப்படாது என அரசு அறிவித்துள்ளது. இது குறித்துப் பேசிய பிரதமர் போரிஸ் ஜான்சன், பொதுமக்கள் அனைவரும் கட்டாயமாக தடுப்பூசி போட்டுக்கொள்ளவேண்டும் என கேட்டுக்கொள்வதாகவும், இருப்பினும், அதற்காக யாரையும் கட்டாயப்படுத்தப்போவதில்லை என்றும் தெளிவுபடுத்தியுள்ளார். பிரிட்டன் நாட்டின் மாண்பும், மதிப்பும் கட்டிக்காக்கப்படும் என உறுதியளித்த ஜான்சன், அனைவரும் தாமாக முன்வந்து தடுப்பூசி போட்டுக்கொள்ளவேண்டும் என்றார்.