புரெவி புயல் காரணமாக இலங்கையில் பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் பாதுகாப்பான பகுதிகளுக்கு இடமாற்றம்
Dec 2 2020 8:50PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
புரெவி புயல் காரணமாக இலங்கையில் பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் பாதுகாப்பான பகுதிகளுக்கு இடமாற்றம் செய்யப்பட்டனர். புரெவி புயல் காரணமாக மணிக்கு 90 கிலோ மீட்டர் வேகத்தில் சூறாவளிக்காற்றுடன் பலத்த மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, திரிகோணமலை மாவட்டம் மற்றும் நாட்டின் கிழக்கு கடற்கரைப் பகுதியில் இருந்து 75 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களை பாதுகாப்பான பகுதிகளுக்கு இடமாற்றம் செய்யும் பணிகளை இலங்கை அரசு மேற்கொண்டது.