அமெரிக்காவில் கொரோனா வைரஸ் கட்டுப்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்த உணவக உரிமையாளர் : உணவகத்தை வலுக்கட்டாயமாக மூடிய போலீசார்
Dec 3 2020 8:51AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
அமெரிக்காவில் கொரோனா வைரஸ் கட்டுப்பாடுகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, திறந்து வைத்திருந்த உணவகம் ஒன்றை போலீசார் வலுக்கட்டாயமாக மூடினர்.
நியூயார்க் நகரில் உள்ள ஸ்டேட்டன் தீவில் கொரோனா வைரஸ் தொடர்பாக ஆரஞ்சு வண்ண எச்சரிக்கைவிடுக்கப்பட்டு, பொதுமக்கள் கூடுமிடங்கள் செயல்படத் தடைவிதிக்கப்பட்டிருந்தது. ஆனால், இது போன்ற தடை உத்தரவால் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக கருதிய உணவக உரிமையாளர் ஒருவர், சட்டதிட்டங்களை மதிக்கப்போவதில்லை என அறிவித்துவிட்டு, தமது உணவகத்தை திறந்துவைத்திருந்தார். இது தொடர்பான புகாரின் அடிப்படையில் அங்கு சென்ற போலீசார் அந்த உணவகத்தை வலுக்கட்டாயமாக மூடினர்.