ஆஸ்திரேலியாவில் புதர்களில் பற்றிய தீ வேகமாகப் பரவியதால் கிராம மக்கள் எச்சரிக்கையாக இருக்க அரசு அறிவுறுத்தல்
Jan 11 2021 5:12PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தெற்கு ஆஸ்திரேலியாவின் சிறிய நகரம் ஒன்றில் புதர்களில் பற்றிய தீ வேகமாகப் பரவியதால் பொதுமக்களுக்கு பீதியடைந்தனர்.
அடிலெய்டின் அருகில் உள்ள லுசிண்டேல் நகரில் பற்றிய தீ வேகமாகப் பரவியதால், ஒரு கிராமத்தில் வசித்துவரும் பொதுமக்கள் அனைவருக்கும் தீ எச்சரிக்கை விடுக்கப்பட்டது. காற்றின் வேகம் மிகவும் அதிகமாக இருப்பதும், வறண்ட வானிலையுமே தீ அதிக இடங்களில் பரவியதற்குக் காரணம் என கருதப்படுகிறது. ஏற்கெனவே கடந்த ஆண்டில் பற்றிய காட்டுத் தீ, வரலாறு காணாத இழப்புக்களை ஏற்படுத்திய நிலையில், தீ குறித்த அச்சம் பொதுமக்களிடையே அதிகமாக உள்ளது. இதற்கிடையே, புதர்களில் பற்றிய தீயைக் கட்டுப்படுத்தும் முயற்சியில் தீ தடுப்பு வீரர்கள் ஈடுபட்டுவருகின்றனர்.