அமெரிக்காவில் 67 ஆண்டுகளில் முதன்முறையாக பெண்ணுக்கு மரணதண்டனை - விஷ ஊசி மூலம் தண்டனை நிறைவேற்றப்பட்டதாக அறிவிப்பு
Jan 13 2021 3:13PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
அமெரிக்காவில் 67 ஆண்டுகளில் முதன்முறையாக பெண் ஒருவருக்கு மரணதண்டனை நிறைவேற்றப்பட்டது.
லிசா மோன்ட்கோமெரி என்ற பெண் கடந்த 2004ம் ஆண்டு மிசவுரி மாநிலத்தில் இளம் பெண் ஒருவரை கழுத்தை நெரித்துக்கொலை செய்தார். மேலும், அவரது வயிற்றைக் கிழித்து, கருவில் இருந்த குழந்தையை கடத்திச் சென்றார். இது தொடர்பாக விசாரணை நடத்திய நீதிமன்றம் அவருக்கு 2007ம் ஆண்டு மரணதண்டனை விதித்தது. ஆனால், அவருக்கு மனநலம் குன்றியிருப்பதால் தண்டனையை நிறைவேற்றக்கூடாது என அவரது வழக்கறிஞர்கள் வாதிட்டதால் தண்டனையை நிறைவேற்றுவதில் தாமதம் ஏற்பட்டது. இருப்பினும், மரணதண்டனையை நிறைவேற்ற உச்ச நீதிமன்றம் ஒப்புதல் அளித்த நிலையில் நேற்று நள்ளிரவில் அவருக்கு விஷ ஊசி போடப்பட்டது. இண்டியானா மாநிலத்தின் Terre Haute நகரில் உள்ள சிறைச்சாலையில் தண்டனை நிறைவேற்றப்பட்டது. 67 ஆண்டுகளில் முதன்முதலாக ஒரு பெண்ணுக்கு அமெரிக்கா மரணதண்டனை நிறைவேற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.