நார்வேயில் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களுக்கு ஏற்பட்ட பாதிப்பு - 70 வயதுக்கு மேற்பட்ட 29 பேர் உயிரிழந்ததால் அதிர்ச்சி
Jan 17 2021 3:28PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
நார்வேயில் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களில், உயிரிழந்தோர் எண்ணிக்கை 29-ஆக அதிகரித்துள்ளது.
நார்வே நாட்டில் அமெரிக்காவின் ஃபைசர் தடுப்பூசிக்கு அனுமதி அளிக்கப்பட்டு, கடந்த 27-ம் தேதி முதல், தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. 70 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு, 25 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களில் பெரும்பாலானோருக்கு பக்க விளைவுகள் ஏற்பட்ட நிலையில், 75 வயதுக்கு மேற்பட்ட 29 முதியவர்கள் பலியாகியுள்ளனர். அந்த முதியவர்களுக்கு ஏற்கனவே உடல்நலக்குறைவுகள் இருந்தாலும், அவர்களது மரணம் தடுப்பூசியுடன் தொடர்புடையதாவகவே கருதப்படுவதாக, அந்நாட்டு மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த மரணங்கள் குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருவதாக, ஃபைசர் நிறுவனம் தெரிவித்துள்ளது.