கொரோனா வைரசால் உயிரிழந்த அமெரிக்க மக்களுக்கு, வாஷிங்டன் நினைவிடத்தில் அஞ்சலி நிகழ்ச்சி - அதிபர் ஜோ பைடன் மற்றும் துணை அதிபர் கமலா ஹாரிஸ் பங்கேற்பு
Jan 20 2021 12:31PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கொரோனா வைரசால் உயிரிழந்த அமெரிக்க மக்களுக்கு, வாஷிங்கடனில் உள்ள நினைவிடத்தில், ஜோ பிடென் மற்றும் கமலா ஹாரிஸ் அஞ்சலி செலுத்தினர்.
உலகிலேயே கொரோனா வைரஸ் தாக்குதலில் முதலிடத்தில் உள்ள அமெரிக்காவில், 2 கோடியே 48 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு நிலையில், 41 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர்.
இந்நிலையில், தலைநகர் வாஷிங்டனில் உள்ள லிங்கன் நினைவிடத்தில் நடைபெற்ற தேசிய நினைவு விழாவில், கொரோனாவால் உயிரிழந்த மக்களுக்கு அதிபராக பதவியேற்க உள்ள ஜோ பிடென் மற்றும் துணைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட கமலா ஹாரிசும் அஞ்சலி செலுத்தினர்.
இதனிடையே, பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ள முடியாத அமெரிக்கர்களின் நினைவாக ஒரு லட்சத்து 91 ஆயிரத்து 500 அமெரிக்க கொடிகள் மற்றும் 56 தூண்கள் தேசிய மாலில் வைக்கப்பட்டுள்ளன. மின்னொளியில் ஜொலிக்கும் இந்த கொடி மற்றும் தூண்கள் அமைந்துள்ள பகுதி 'Field of Flags' என்று அழைக்கப்படுகின்றன.