பதவி விலகும் முன் பொதுமன்னிப்பு அளித்த அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் - தண்டனை குறைப்பு, தண்டனையை ரத்து செய்து உத்தரவு
Jan 20 2021 1:13PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், தமது பதவிக்காலத்தின் இறுதி நாளில் 140க்கும் மேற்பட்டோருக்கு பொதுமன்னிப்பு வழங்கியுள்ளார்.
அமெரிக்காவில் பல்வேறு குற்றச்சாட்டுக்களின் பேரில் தண்டனை விதிக்கப்பட்டவர்களுக்கு கருணை அடிப்படையில் பொதுமன்னிப்பு அளிக்கும் உரிமை அதிபருக்கு அளிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு நடைபெற்ற அதிபர் தேர்தலில் வெற்றிபெற்று புதிய அதிபராக ஜனநாயக கட்சியின் ஜோ பைடன் இன்று பதவியேற்கவுள்ள நிலையில், டொனால்ட் ட்ரம்ப் தமது பதவிக்காலத்தின் கடைசி நாளில் 140க்கும் மேற்பட்டோருக்கு பொதுமன்னிப்பு அளித்துள்ளார். இதில், தண்டனையை முழுமையாக ரத்து செய்தல், தண்டனை காலத்தைக் குறைத்தல் போன்ற நடவடிக்கைகள் அடங்கும். கொலைக் குற்றச்சாட்டு முதல், அரசு நிதிகளில் முறைகேடு செய்தல் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுக்களில் ஏற்கெனவே சிறையில் அடைக்கப்பட்டவர்கள் இதன் மூலம் விடுதலை ஆகும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.