பாதிப்பு அதிகமுள்ள பகுதியில் வசிப்பவர்களுக்கு கட்டுப்பாடு - புதிய விதிகளை அமல்படுத்த ஐரோப்பிய ஆணையம் முடிவு
Jan 22 2021 4:52PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள ஐரோப்பிய நாடுகளில் இருந்து பயணம் மேற்கொள்பவர்களுக்கு புதிய கட்டுப்பாடுகளை விதித்து ஐரோப்பிய ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
பிரான்ஸ், இத்தாலி போன்ற நாடுகளில் மீண்டும் கொரோனா வைரஸ் பரவல் கடந்த சில வாரங்களாக மிகப்பெரும் அச்சத்தை ஏற்படுத்திவருகிறது. இந்நிலையில், இது போன்ற அச்சம் நிலவும் பகுதிகள் 'அடர் சிவப்பு வண்ண' எச்சரிக்கை பகுதிகளாக கருதப்படும் என்றும், அப்பகுதிகளில் இருந்து பிற இடங்களுக்கு பயணம் மேற்கொள்ளும் போது, கொரோனா பரிசோதனை, தனிமைப்படுத்துதல் உள்ளிட்ட பாதுகாப்பு நடைமுறைகளைப் பின்பற்றவேண்டும் ஐரோப்பிய ஆணையம் அறிவித்துள்ளது. இதனால் ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகளுக்குள் பயணிப்போர் புதிய விதிகளுக்கு உடன்படவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.