பாகிஸ்தானில் அடுத்த ஆண்டு முதல் 5ஜி சேவை தொடக்கம் : பொருளாதாரத்தை மேம்படுத்த அந்நாட்டு அரசு நடவடிக்கை
Jan 25 2021 9:54AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
அடுத்த ஆண்டு முதல் பாகிஸ்தானில் 5ஜி தொலைத்தொடர்பு சேவை அறிமுகமாக உள்ளதாக இஸ்லாமாபாத்தை சேர்ந்த ஊடக நிறுவனங்கள் உறுதி செய்துள்ளன.
5G இணையத்தின் தரவிறக்க வேகம் ஒரு நொடிக்கு ஒரு ஜிகா பைட் என அதிகரிக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கான பணிகள் இப்போது பாகிஸ்தானில் வேகம் எடுத்துள்ளதாகவும் தகவல்கள் வந்துள்ளன. இதன் மூலம் பொருளாதாரத்தை மேம்படுத்தவும் அந்த நாடு அரசு திட்டமிட்டுள்ளதாக கூறபடுகிறது. 2023 நிதியாண்டில் 5ஜி அலைக்கற்றைக்கான ஏலத்தை விட உள்ளதாக பாகிஸ்தான் தொலைத்தொடர்பு ஆணையம் கடந்த டிசம்பரில் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.