அருகி வரும் ராஜாளி கழுகுகளை காக்க நடவடிக்கை - பொலிவியாவில் மீட்கப்பட்ட கழுகுகள் காட்டில் விடுவிப்பு
Feb 25 2021 2:30PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
பொலிவியாவில் மீட்கப்பட்ட இரண்டு ராஜாளி கழுகுகள் காட்டில் சுதந்திரமாகப் பறக்கவிடப்பட்டன.
ஆண்டீஸ் மலைத் தொடரில் அருகி வரும் இனமாகக் கருதப்படும் காண்டர் எனப்படும் ராஜாளி கழுகுகளை சில பகுதிகளில் விவசாயிகள் நஞ்சு வைத்து கொல்லும் சம்பவங்கள் அதிகரித்துவருகின்றன. ஆனால், இந்த வகை கழுகுகளின் எண்ணிக்கையை அதிகரிக்க அர்ஜென்டினா, சிலி, பொலிவியா உள்ளிட்ட நாடுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகின்றன. இதற்கிடையே, நஞ்சு கலந்த உணவை உட்கொண்டு மயங்கிய நிலையில் மீட்கப்பட்ட இரண்டு ராஜாளி கழுகுகளுக்கு சிகிச்சை அளித்து, அவை முற்றிலும் குணமான பின் மீண்டும் காட்டுக்குள் சுதந்திரமாக பறக்கவிடப்பட்டன.