இந்தோனேசியாவில் சட்டவிரோத தங்கச் சுரங்கத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 6 பேர் உயிரிழந்ததாக அறிவிப்பு
Feb 25 2021 7:50PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
இந்தோனேசியாவில் சட்டவிரோதமாகச் செயல்பட்ட தங்கச் சுரங்கத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 6 ஆக அதிகரித்துள்ளது.
மத்திய சுலைவேசி மாகாணத்தில் உள்ள புரங்கா மற்றும் சுற்றுப்புறங்களில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்துவந்தது. இதையடுத்து, புரங்காவில் சட்டவிரோதமாகச் செயல்பட்டுவந்த தங்கச் சுரங்கத்தில் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவில் இதுவரை 6 பேர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், மீட்புப் பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டுவருகின்றன. சுரங்கத்தில் பணியாற்றி நிலச்சரிவில் சிக்கிய பணியாளர்களின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் மீட்புப் பணிகள் நடைபெறும் இடத்தில் சோகமாகக் காத்திருக்கும் நிலை நீடிக்கிறது.