நைஜீரியாவில் கடத்தப்பட்ட 300-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவிகளை மீட்க அரசு தீவிர முயற்சி
Feb 26 2021 8:12PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
நைஜீரியாவில் மீண்டும் 300-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவிகள் கடத்தப்பட்டிருப்பது உலக நாடுகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நைஜீரியாவின் வட பகுதியில் உள்ள நைஜர் மாநிலத்தில் கடந்த வாரம் 27 மாணவர்கள் உள்பட 42 பேரை தீவிரவாதிகள் கடத்திச் சென்ற சம்பவத்தில் ஒருவர் கூட இன்னும் மீட்கப்படவில்லை. இதேபோல் கடந்த 2014ம் ஆண்டு சிபோக் பள்ளியில் இருந்து கடத்தப்பட்ட 300 மாணவிகளில் பெரும்பாலானோர் இன்னும் மீட்கப்படவில்லை. இந்நிலையில் வடமேற்கில் உள்ள Zamfara மாநிலத்தில் இருந்து தற்போது மீண்டும் 300க்கும் மேற்பட்ட மாணவிகள் கடத்தப்பட்டுள்ளனர். இது குறித்து கூடுதல் விவரங்களை வெளியிட போலீசார் மறுத்துவிட்ட நிலையில், துப்பாக்கி ஏந்திய தீவிரவாதிகள் இச்செயலில் ஈடுபட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.