மியான்மரில் ராணுவ ஆட்சிக்கு எதிரான போராட்டம் தீவிரம் : 100-க்கும் மேற்பட்டோர் கைது
Feb 28 2021 2:51PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
மியான்மரில் ராணுவ ஆட்சிக்கு எதிரான போராட்டம் தீவிரம் அடைந்துள்ள நிலையில், நூற்றுக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மியான்மரில் ஜனநாயக ரீதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை ராணுவம் கடந்த 1-ந்தேதி கவிழ்த்துவிட்டு ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியது. முக்கிய தலைவர்கள் சிறை வைக்கப்பட்டுள்ளனர். ராணுவ ஆட்சியை கண்டித்து பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில், 100க்கும் மேற்பட்ட போராட்டக்காரர்களை போலீசார் கைது செய்தனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் இதுவரை 5 பேர் உயிரிழந்துள்ளனர். இதனிடையே, மியன்மாரில் ராணுவ புரட்சிக்கு காரணமான அதிகாரிகளுக்கு அமெரிக்கா ஏற்கெனவே தண்டனை விதித்துள்ள நிலையில், அந்நாட்டின் மீது பொருளாதார தடை விதிக்க ஐரோப்பிய ஒன்றியமும் திட்டமிட்டுள்ளது.