மியான்மரில் ஆட்சியைக் கைப்பற்றிய ராணுவத்துக்கு நாடு முழுவதும் எதிர்ப்பு - போராட்டத்தில் குழந்தைகளும் குதித்தனர்
Mar 1 2021 2:29PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
மியான்மர் ராணுவத்துக்கு எதிராக குழந்தைகளும் போராட்டத்தில் குதித்துள்ளனர்.
மியான்மரில் ஆட்சி மற்றும் அனைத்து அதிகாரங்களையும் கைப்பற்றுவதாக கடந்த மாதத் தொடக்கத்தில் அறிவித்த அந்நாட்டு ராணுவம், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர்களைக் கைது செய்து சிறையில் அடைத்தது. ஆங் சான் சூகி உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் வீட்டு காவலில் வைக்கப்பட்டனர். இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்றுவரும் நிலையில், தற்போது இப்போராட்டத்தில் குழந்தைகளும் குதித்துள்ளனர். நாட்டின் இரண்டாவது மிகப்பெரிய நகரமான மண்டலையில், ராணுவத்துக்கு எதிரான வாசகங்கள் பொறிக்கப்பட்ட பதாகைகளுடன் குழந்தைகள் ஊர்வலமாகச் சென்றனர். ராணுவத்துக்கு எதிரான முழக்கங்களையும் குழந்தைகள் அப்போது எழுப்பினர்.