நைஜீரியாவில் கடத்தப்பட்ட மாணவிகள் அனைவரும் விடுவிப்பு
Mar 2 2021 4:49PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
நைஜீரியாவில் கடந்த வாரம் கடத்தப்பட்ட மாணவிகள் அனைவரும் விடுவிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நைஜீரியாவின் வடமேற்கில் உள்ள Zamfara மாநிலத்தில் இருந்து கடந்த வெள்ளிக்கிழமையன்று 317 மாணவிகள் கடத்தப்பட்டனர். அரசினர் அறிவியல் பள்ளி விடுதிக்குள் அதிரடியாக ஆயுதங்களுடன் நுழைந்த தீவிரவாதிகள் துப்பாக்கி முனையில் மாணவிகளைக் கடத்திச் சென்றனர். இந்த சம்பவம் நடந்ததற்கு ஒரு வாரத்துக்கு முன்பு நைஜர் மாநிலத்தின் பள்ளி ஒன்றில் இருந்து 27 மாணவர்கள் உள்பட 42 பேரை இதே போன்ற ஆயுதம் ஏந்திய கும்பல் ஒன்று கடத்திச் சென்றது. இந்நிலையில், ஜம்ஃபாரா மாநிலத்தில் இருந்து கடத்தப்பட்ட மாணவிகள் விடுவிக்கப்பட்டுள்ளதாக மாநில ஆளுனர் தமது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.