நைஜீரியாவில் பள்ளி மாணவிகளைக் கடத்திய தீவிரவாதிகள் மிகவும் கொடூரமாக நடத்து கொண்டதாக குற்றச்சாட்டு - விடுவிக்கப்பட்ட மாணவிகள் கண்ணீர் பேட்டி
Mar 3 2021 6:23AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
நைஜீரியாவில் பள்ளி மாணவிகளைக் கடத்திய தீவிரவாதிகள் அவர்களை மிகவும் கொடூரமாக நடத்தியதாக, விடுவிக்கப்பட்ட மாணவிகள் தெரிவித்துள்ளனர்.
மாணவிகளைக் கடத்திய தீவிரவாதிகள் துப்பாக்கி முனையில் அவர்களை அடர்ந்த காட்டுப்பகுதிக்குள் அழைத்துச் சென்றதாகவும், பின்னர் அவர்களை பிணைக்கைதிகளாக வைத்து அரசிடம் பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. காட்டுக்குள் மாணவிகளை அழைத்துச் சென்ற தீவிரவாதிகள் அவர்களை துப்பாக்கி கட்டை மற்றும் கம்பினால் தாக்கியதாகத் தெரிவித்துள்ள மாணவிகள், துப்பாக்கியால் சுட்டுக்கொன்றுவிடுவதாக அடிக்கடி மிரட்டியதாகவும் அச்சத்துடன் தெரிவித்துள்ளனர். தற்போது பாதுகாப்பாக பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில், அனைத்து மாணவிகளும் அச்ச உணர்விலிருந்து இன்னும் மீளவில்லை என ஜாம்ஃபரா ஆளுனர் தெரிவித்துள்ளார்.