பொலிவியா பல்லைக்கழகத்தில் மாடி கைப்பிடி முறிந்ததால் கீழே விழுந்து 5 மாணவர்கள் உயிரிழப்பு
Mar 3 2021 3:33PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
பொலிவியா பல்லைக்கழகம் ஒன்றில் மாடி கைப்பிடி முறிந்து விழுந்ததில் காயமடைந்த 5 மாணவர்கள் உயிரிழந்தனர்.
பொலிவியா நாட்டின் எல் ஆல்ட்டோ நகரில் உள்ள பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு வந்த மாணவர்கள் ஒரு மாடிமீது கூட்டமாக நின்றிருந்தனர். அப்போது மாணவர்களுக்கு இடையே ஏற்பட்ட தள்ளுமுள்ளுவைத் தொடர்ந்து, மாடியின் கைப்பிடி முறிந்துவிழுந்தது. இதனால் 8 மாணவர்கள் மாடியிலிருந்து கீழே விழுந்தனர். இதில் 5 மாணவர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர், காயமடைந்த மாணவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.