கைது செய்யப்பட்டுள்ள தலைவர்களை விடுவிக்கவேண்டும் - மியான்மர் ராணுவத்துக்கு போப்பாண்டவர் வலியுறுத்தல்
Mar 3 2021 4:42PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
மியான்மர் ராணுவம் கைது செய்துள்ள தலைவர்களை உடனடியாக விடுவிக்கவேண்டும் என போப்பாண்டவர் வலியுறுத்தியுள்ளார்.
கடந்த மாதத் தொடக்கத்தில் மியான்மர் ராணுவம், ஆங் சான் சூகி உள்ளிட்ட, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர்களைக் கைது செய்தது. பின்னர் ஆட்சி மற்றும் அதிகாரங்களைக் கைப்பற்றியதாக அறிவித்தது. ராணுவத்தின் இந்த அத்துமீறலுக்கு உலகம் முழுவதும் எதிர்ப்புக்கள் தொடர்ந்துவருகின்றன. இந்நிலையில், ராணுவம் கைது செய்த தலைவர்களை விடுவிக்கவேண்டும் என கத்தோலிக்க மதத்தலைவர் போப் பிரான்சிஸ் வலியுறுத்தியுள்ளார்.