கிரீஸ் நாட்டில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் : ரிக்டர் அளவில் 6.2 ஆக பதிவு - ஏராளமான கட்டடங்கள் இடிந்தன
Mar 4 2021 7:43AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கிரீஸ் நாட்டில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் காரணமாக ஏராளமான கட்டடங்கள் இடிந்துவிழுந்தன.
கிரீஸ் நாட்டின் மத்திய பகுதியில் உள்ள Larissa மற்றும் சுற்றுப் புறங்களில் 6 புள்ளி 2 மேக்னிட்யூட் அளவுள்ள சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் தமாசி என்ற கிராமத்தில் மட்டும் பலநூற்றுக்கணக்கான வீடுகள், பள்ளி கட்டங்கள் இடிந்துவிழுந்தன. கட்டடங்கள் இடிந்து விழுந்ததால் ஏராளமான வாகனங்களும் நொறுங்கிக் கிடந்ததைக் காணமுடிந்தது. இந்த கிராமத்துக்கு அருகே மற்றொரு கிராமத்தில் இடிபாடுகளுக்குள் சிக்கித் தவித்த மாற்றுத்திறனாளி ஒருவரை தீயணைப்புத்துறையினர் பத்திரமாக மீட்டனர். நிலநடுக்கம் ஏற்படுவதற்கு முன்பாக பல முறை இலேசான நில அதிர்வுகள் ஏற்பட்டதால் பள்ளிகளை உடனே மூட அதிகாரிகள் உத்தரவிட்டதாகவும், பொதுமக்களுக்கு பல்வேறு பாதுகாப்பு அறிவுரைகளை அளித்திருந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.