எதிர்க்கட்சிகளின் நெருக்கடிக்குப் பணிந்தார் பிரதமர் இம்ரான்கான் - பாக். நாடாளுமன்றத்தில் நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு கோருகிறார்
Mar 5 2021 7:19PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
பாகிஸ்தானில் எதிர்க்கட்சிகளின் நெருக்கடிக்குப் பணிந்து, பிரதமர் இம்ரான்கான், அந்நாட்டு நாடாளுமன்றத்தில் நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு கோருகிறார்.
பாகிஸ்தானில் அண்மையில் நடைபெற்ற நாடாளுமன்ற மேலவையான செனட் சபை தேர்தலில், ஆளும் பாகிஸ்தான் Tehreek-e-Insaf கட்சியின் வேட்பாளரும், நிதியமைச்சருமான Abdul Hafeez Sheikh-ஐ பாகிஸ்தான் ஜனநாயக இயக்க கூட்டணி வேட்பாளரும், முன்னாள் பிரதமருமான யூசுஃப் ராஸா கிலானி தோற்கடித்தார். இந்தத் தோல்வி பிரதமர் இம்ரான் கானுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது. இதையடுத்து, பிரதமர் பதவி விலக வேண்டும் என எதிர்க்கட்சிகள் நெருக்கடி கொடுத்தன. இதனைத் தொடர்ந்து, தனது அரசு மீது நம்பிக்கை வாக்கெடுப்பு கோர இருப்பதாக இம்ரான் கான் தெரிவித்தார்.
தொலைக்காட்சி வழியாக நாட்டு மக்களுக்குத் தெரிவித்த இம்ரான்கான், 11 கட்சிகளைக் கொண்ட PTM கூட்டணி, ஜனநாயகத்தைக் கேலிக் கூத்தாக்குவதாகத் தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு கோரவுள்ளதாகவும், எனவே PTI கட்சியைச் சேர்ந்த கீழவை உறுப்பினர்கள் தவறாது கலந்து கொண்டு தனக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்றும், தனக்கு ஆதரவு கிடைக்காத பட்சத்தில், எதிர்க்கட்சி வரிசையில் அமரப் போவதாகவும் இம்ரான்கான் தெரிவித்தார்.
ஆட்சியிலிருந்து தன்னை அகற்றினாலும், மக்களைச் சந்தித்து, அவர்களுக்கான போராட்டங்களைத் தொடரப்போவதாகவும் திரு. இம்ரான்கான் தெரிவித்தார்.