ஷியா பிரிவு புனித தலைவருடன் போப்பாண்டவர் சந்திப்பு - மதங்களுக்கு இடையே ஒற்றுமை குறித்து இருவரும் பேச்சு
Mar 6 2021 1:07PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ஈராக் பயணத்தின் இரண்டாம் நாளில் ஷியா பிரிவு இஸ்லாமியத் தலைவர்களை போப்பாண்டவர் சந்தித்துப் பேசினார்.
ஈராக்கின் புனித நகரான Najafல் இந்த சந்திப்பு நடைபெற்றது. அப்போது, பல லட்சக்கணக்கான ஷியா இஸ்லாமியர்களின் புனித தலைவரான கிராண்ட் Ayatollah Ali al-Sistaniயுடன் போப்பாண்டவர் உரையாற்றினார். கொரோனா பரவலுக்குப் பின் போப் பிரான்சிஸ் மேற்கொள்ளும் முதல் வெளிநாட்டுப் பயணமாக இப்பயணம் அமைந்துள்ள நிலையில், ஈராக் நாட்டிற்கு ஒரு போப்பாண்டவர் இப்போது தான் முதன்முதலாக அதிகாரப்பூர்வமான பயணம் மேற்கொண்டிருக்கிறார் என்ற சிறப்பையும் பெற்றுள்ளது. ஈராக்கில் சிறுபான்மையராக வசித்துவரும் கிறிஸ்துவர்கள் மீது 2003ம் ஆண்டு முதல் நடைபெற்றுவரும் தாக்குதல்கள், மற்றும் இருமதங்களுக்கு இடையேயான ஒற்றுமை குறித்து இருதலைவர்களும் பேசியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.