மெக்சிகோவில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிப்பு - அதிபர் மாளிகையை முற்றுகையிட மகளிர் அமைப்புகள் முடிவு
Mar 6 2021 2:42PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
மெக்சிகோவில பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருவதை கண்டித்து அதிபர் மாளிகையை முற்றுகையிடப்போவதாக மகளிர் அமைப்புகள் அறிவித்துள்ளன. இதனை தொடர்ந்து அதிபர் மாளிகையைச் சுற்றிலும் தடுப்புக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
மெக்சிகோவில் போதைப் பொருள் கடத்தல் கும்பல் பெண்கள் மீது பாலியல் ரீதியாக தாக்குதல் நடத்திப் படுகொலை செய்து வரும் நிகழ்வுகள் அதிகாரித்து வருவாக புகார் எழுந்துள்ளது. கடந்த ஆண்டில் மட்டும் இது போன்ற குற்றங்களில் 939 பெண்கள் பாதிக்கப்பட்டதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. இதனை கண்டித்து மகளிர் அமைப்புக்கள் தொடர்ந்து போராட்டங்களை நடத்திவருகின்றன. இந்நிலையில், குற்றவாளிகளுக்கு அஞ்சி அவர்களுக்கு ஆதரவாக அதிபர் செயல்பட்டுவருதாகவும் விமர்சனம் எழுந்துள்ளது. இதனால் அதிபர் மாளிகையை முற்றுகையிடப்போவதாக மகளிர் அமைப்புகள் அறிவித்துள்ளன. இதனால் அதிபர் மாளிகையைச் சுற்றிலும் இரும்பு தடுப்புக்களால் அரண் அமைக்கப்பட்டுள்ளது.