பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் தானாக முன்வந்து வாக்கெடுப்பு நடத்திய இம்ரான்கான் : நம்பிக்கை வாக்கெடுப்பில் பிரதமர் வெற்றிபெற்றதாக அறிவிப்பு
Mar 7 2021 11:18AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் பிரதமர் இம்ரான் கான் வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தானில் அண்மையில் நடைபெற்ற மேலவைத் தேர்தலில் ஆளும் கட்சியின் நிதி அமைச்சர் தோல்வியடைந்ததாக அறிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்கும் வகையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த இம்ரான் கான் தானாக முன்வந்து நடவடிக்கை எடுத்தார். ஆனால் இந்த வாக்கெடுப்பை எதிர்க்கட்சிகள் புறக்கணித்த நிலையில் 178 வாக்குகள் பெற்று வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 172 வாக்குகள் மட்டும் தேவைப்பட்ட நிலையில், 178 வாக்குகளை இம்ராம்கான் பெற்றுள்ளார்.