கொரோனாவை விரைவில் கட்டுப்படுத்த முடியும் - உலக சுகாதார அமைப்பின் தலைவர் நம்பிக்கை
Apr 20 2021 2:26PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கொரோனா பரவலை உலக நாடுகள் இன்னும் சில மாதங்களில் கட்டுக்குள் கொண்டு வர முடியுமென உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
ஜெனிவாவில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சில மாதங்களில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுக்குள் கொண்டு வருவதற்கான அனைத்து சாத்தியங்களும் உலக நாடுகளிடம் இருப்பதாக குறிப்பிட்டார். எனினும் அவற்றை உலக நாடுகள் சரியான முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டுமென அறிவுறுத்திய டெட்ரோஸ், வளர்ந்த நாடுகள் மத்திய கிழக்கு நாடுகளின் தேவையை அறிந்து அங்கு கொரோனா தடுப்பூசியை அனுப்பி வைக்க வேண்டுமென கேட்டுக் கொண்டார்.