இந்தியாவில் இருந்து வரும் பயணிகளுக்கு கூடுதல் கட்டுப்பாடுகள் - சிங்கப்பூர் சுகாதாரத்துறை அறிவிப்பு
Apr 21 2021 12:11PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கொரோனா அச்சம் காரணமாக இந்தியாவில் இருந்து சிங்கப்பூர் வரும் பயணிகளுக்கு கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என அந்நாட்டு சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.
உலக அளவில் கொரோனா தினசரி பாதிப்பில் இந்தியா தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. இதையடுத்து, பிரிட்டனின் சிவப்பு பட்டியலில் இந்தியா சேர்க்கப்பட்டுள்ளது. இந்தியாவுக்கு செல்லவேண்டாம் என அமெரிக்கர்களுக்கு அந்நாட்டு அரசு அறிவுறுத்தியுள்ளது. இந்தியாவிலிருந்து வரும் அனைத்து விமானங்களுக்கும் ஹாங்காங் தடை விதித்துள்ளது. இந்நிலையில், இந்தியாவில் இருந்து வரும் பயணிகளுக்கு கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என சிங்கப்பூர் அறிவித்துள்ளது. இந்தியாவில் இருந்து வரும் பயணிகள் பிரத்யேக மையங்களில் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவதுடன் கூடுதலாக 7 நாட்கள் வீட்டிலும் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும் என்று சிங்கப்பூர் சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.