ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் - ரிக்டர் அளவுகோலில் 6 புள்ளிகளாக பதிவு
May 14 2021 11:37AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ஜப்பானில் இன்று அதிகாலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 6 புள்ளிகளாக பதிவானது.
ஜப்பான் நாட்டில் அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படுவது தொடர்கதையாகி வருகிறது. அந்த நாடு 4 டெக்டானிக் பிளேட்கள் சந்திக்கும் இடத்தில் அமைந்து உள்ளதால் ஒவ்வொரு ஆண்டும் உலகில் ஏற்படும் சக்திவாய்ந்த நிலநடுக்கங்களில் 20 சதவீத நிலநடுக்கங்கள் ஜப்பானில் மட்டும் ஏற்படுகின்றன.
இந்நிலையில் ஜப்பான் நாட்டின் கிழக்கு கடற்கடை பகுதியை மையமாக கொண்டு இன்று காலை 5.28 மணியளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. பசிபிக் பெருங்கடலில் ஏற்பட்ட இந்த நில நடுக்கம் Honshu தீவில் உணரப்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 6-ஆக பதிவாகி உள்ளதாக தேசிய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நிலநடுக்கம் காரணமாக அப்பகுதியில் உள்ள கட்டிடங்கள் குலுங்கியதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த விவரங்கள் முழுமையாக வெளியாகவில்லை. நிலநடுக்கத்தால் ஜப்பானில் எந்தவித சுனாமி எச்சரிக்கையும் விடப்படவில்லை.