சர்வதேச அளவில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 33 லட்சத்து 58 ஆயிரத்தை தாண்டியது - பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 16 கோடியே 18 லட்சமாக உயர்வு
May 14 2021 12:33PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சர்வதேச அளவில் கொரோனாவால் உயிரிழந்ததோர் எண்ணிக்கை 33 லட்சத்து 58 ஆயிரத்தை தாண்டியுள்ளது. பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 16 கோடியே 18 லட்சத்தை கடந்துள்ளது.
சீனாவின் வுகான் நகரில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ், உலக நாடுகளையே உலுக்கி வருகிறது. வைரஸ் தொற்று பரவி ஒரு ஆண்டு கடந்து விட்ட போதிலும், அதன் வீரியம் இன்னும் குறைந்தபாடில்லை. ஒருபுறம் தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையிலும், கொரோனா பரவல் மற்றும் உயிரிழப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. உலக அளவில் கொரோனா தொற்று பாதிப்பில் அமெரிக்கா தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. அந்நாட்டில் 3 கோடியே 36 லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், பலி எண்ணிக்கை 6 லட்சத்தை நெருங்கி வருகிறது. இதேபோல், ஃபிரான்ஸ், பிரசில், துருக்கி, இத்தாலி, ரஷ்யா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளும் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த முடியாமல் திணறி வருகின்றன.
தற்போதைய நிலவரப்படி, உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 16 கோடியே 18 லட்சத்தை தாண்டியுள்ளது. கொரோனா வைரசுக்கு 33 லட்சத்து 58 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். சர்வதேச அளவில் கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 13 கோடியே 96 லட்சத்திற்கும் மேற்பட்டோர் மீண்டுள்ளனர்.