வழிபாட்டுத் தலங்களில் பணியாற்றுவோருக்கு தடுப்பூசி - கொரோனா பரவலைக் குறைக்க தாய்லாந்து அரசு நடவடிக்கை
Jul 30 2021 6:17PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் உள்ள வழிபாட்டுத் தலங்களில் பணியாற்றும் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தியுள்ளதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.
தாய்லாந்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்துவரும் நிலையில், ஒரே நாளில் 17 ஆயிரத்து 345 பேருக்கு தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. கொரோனா பரவலைத் தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை அந்நாட்டு அரசு எடுத்துவரும் நிலையில், அமெரிக்கா, இந்தியா, சீனா போன்ற நாடுகளிலிருந்து தடுப்பூசி மருந்துகள் அளிக்கப்பட்டுவருகின்றன. இந்நிலையில், தலைநகர் பாங்காக்கில் வழிபாட்டுத் தலங்களில் பணியாற்றும் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் நிறைவடைந்ததாக அதிகாரிகள் அறிவித்துள்ளனர். இது போன்ற பணியிடங்களில் பணியாற்றுவோர் பொதுமக்களிடம் நெருங்கிய தொடர்பிலிருப்பதால் தடுப்பூசி செலுத்துவதில் அவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுவருகிறது.