ஒலிம்பிக் நடைபெறும் டோக்கியோவில் அதிகரிக்கும் கொரோனா தொற்று : ஒரே நாளில் 3,300 பேர் கொரோனாவால் பாதிப்பு
Jul 31 2021 10:11AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
டோக்கியோவில் ஒரே நாளில் 3 ஆயிரத்து 300 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
டோக்கியோவில் பல்வேறு கொரோனா கட்டுப்பாடுகள் பின்பற்றப்பட்டு வந்தாலும், ஒலிம்பிக்கில் புதிதாக இணையும் வெளிநாட்டு வீரர்களால் பாதிப்புகள் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. அதிலும் கடந்த 5 நாட்களில் தினசரி பாதிப்புகள் டோக்கியோ கிராமத்தில் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் தற்போது புதிதாக ஒலிம்பிக் கிராமத்தில் 3 வீரர், வீராங்கனைகள் உட்பட 27 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஒரே நாளில் 3 ஆயிரத்து 300 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஜப்பான் முழுவதும் 10 ஆயிரத்து 743 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.