கொரோனா தடுப்பூசி போட்டால் ரூ.7 ஆயிரம் ஊக்கத்தொகை : அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உத்தரவு
Jul 31 2021 10:19AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கொரோனா தடுப்பூசி செலுத்தி கொள்வதை ஊக்கப்படுத்தும் வகையில், தடுப்பூசி போட்டுக் கொள்ளும் நபர்களுக்கு ஏழாயிரம் ரூபாய் வழங்க அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உத்தரவிட்டுள்ளார்.
அமெரிக்காவில் தற்போது இந்த டெல்டா மாறுபாடு கொரோனா வைரஸ் பரவ தொடங்கியுள்ளது. இதனால் அங்கு மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரிக்கும் சூழல் உருவாகியுள்ளது. கொரோனா தடுப்பூசி போட்டு கொள்ளாதவர்களே வைரஸ் பாதிப்புக்கு ஆளாகி வருவதாக சுகாதார நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். அமெரிக்க மக்கள் தொகையில் சரிபாதி பேர் முழுமையாக தடுப்பூசி போட்டுக்கொண்ட நிலையில் தகுதி உடைய அனைவரையும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வைக்க ஜனாதிபதி ஜோ பைடன் தலைமையிலான நிர்வாகம் தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வகையில் மக்கள் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொள்வதை ஊக்கப்படுத்தும் வகையில், தடுப்பூசி போட்டுக் கொள்ளும் நபர்களுக்கு 100 டாலர் அதாவது இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் 7,000 வழங்க அனைத்து மாகாண அரசுகளுக்கும் அவர் உத்தரவிட்டுள்ளார்.