சர்வதேச அளவில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 42 லட்சத்து 24 ஆயிரத்தைத் தாண்டியது - பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 19 கோடியே 80 லட்சமாக உயர்வு
Jul 31 2021 12:36PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சர்வதேச அளவில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 42 லட்சத்து 24 ஆயிரத்தைத் தாண்டியுள்ள நிலையில், பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 19 கோடியே 80 லட்சத்தைக் கடந்துள்ளது.
கொரோனா தொற்று பாதிப்பில் உலக அளவில் அமெரிக்கா தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. அந்நாட்டில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3 கோடியே 56 லட்சத்தைத் தாண்டியுள்ள நிலையில், பலி எண்ணிக்கை 6 லட்சத்து 29 ஆயிரத்தைக் கடந்துள்ளது. பாதிப்படைந்த நாடுகளின் பட்டியலில் இரண்டாம் இடத்தில் இந்தியா தொடர்ந்து நீடித்து வருகிறது. தொற்று பாதிப்பில் அடுத்தடுத்த இடங்களில் உள்ள ப்ரசில், ஃபிரான்ஸ், ரஷ்யா, துருக்கி, இங்கிலாந்து, அர்ஜெண்டினா உள்ளிட்ட நாடுகளும் கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்த முடியாமல் திணறி வருகின்றன. தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையிலும் கொரோனா பரவல் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது.
தற்போதைய நிலவரப்படி, உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 19 கோடியே 80 லட்சத்தை தாண்டியுள்ளது. 42 லட்சத்து 24 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனா வைரசுக்கு பலியாகிவிட்டனர். சர்வதேச அளவில் கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 17 கோடியே 89 லட்சத்திற்கும் மேற்பட்டோர் மீண்டுள்ளனர்.