இந்தியா, ஆஸ்திரேலியா மற்றும் ஜப்பான் பிரதமர்களுடன் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வரும் 24-ம் தேதி, கலந்துரையாடல் - வெள்ளை மாளிகையில் நேரில் ஆலோசனை
Sep 14 2021 10:44AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
இந்தியா, ஆஸ்திரேலியா மற்றும் ஜப்பான் பிரதமர்களுடன் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வரும் 24-ம் தேதி, வெள்ளை மாளிகையில் நேரில் ஆலோசனை நடத்தவுள்ளார்.
இந்தியா, அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா ஆகிய 4 நாடுகள் இணைந்து 'குவாட்' அமைப்பை உருவாக்கி உள்ளன. இந்த அமைப்பின் முதல் உச்சி மாநாடு கடந்த மார்ச் மாதம் காணொலி காட்சி மூலம் நடைபெற்றது. இந்நிலையில், குவாட் தலைவர்களின் நேரடி பங்கேற்பில் முதல் உச்சி மாநாடு அமெரிக்காவில் நடைபெற உள்ளது. அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தலைமையில் வெள்ளை மாளிகையில் வரும் 24-ம் தேதி குவாட் தலைவர்கள் சந்திக்கவுள்ளனர். இந்த மாநாட்டில் இந்திய பிரதமர் திரு. நரேந்திரமோடி, ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்கார்ட் மோரிஸ், ஜப்பான் பிரதமர் யோஷிஹைட் சுகா ஆகியோர் பங்கேற்கின்றனர். மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் திரு.மோடி விரைவில் அமெரிக்கா செல்லவுள்ளார். கொரோனா வைரஸ், பருவநிலை மாற்றம் உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து குவாட் மாநாட்டில் தலைவர்கள் விவாதிக்க உள்ளனர்.