space x நிறுவனத்தின் மூலம் விண்வெளியில் ஒருநாள் பயணத்தை நிறைவு செய்த வீரர்கள் : பயணம் முடிந்த பிறகு, அட்லாண்டிக் கடலில் தரை இறங்கவுள்ளதாக தகவல்
Sep 17 2021 7:48AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
விண்வெளிக்கு 4 பேரை சுற்றுலா அனுப்பிய ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் ராக்கெட், பயணம் முடிந்த பிறகு அட்லாண்டிக் கடலில் தரை இறங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்வெளிக்கு வீரர்களே சென்று வந்த நிலையில் முதல் முறையாக பொதுமக்களை ராக்கெட்டில் சுற்றுலாவுக்கு அனுப்ப 'ஸ்பேஸ் எக்ஸ்' நிறுவனம் முடிவு செய்து அதற்கான பணிகளிலும், சோதனைகளிலும் ஈடுபட்டது. பிரபல கோடீஸ்வரரான எலான் மஸ்க், தனது சொந்த நிறுவனமான 'ஸ்பேஸ் எக்ஸ்' மூலம் நாசாவுடன் ஒப்பந்தம் வைத்து ராக்கெட்டுகளை தயாரித்து விண்வெளிக்கு அனுப்பி வருகிறார். நேற்று அதிகாலை, பிளோரிடாவில் உள்ள கேப் கெனவெரல் விண்வெளி தளத்தில் இருந்து முதல் முறையாக 4 அமெரிக்கர்கள் விண்வெளி சென்றனர். அவர்களை ஏற்றிக்கொண்டு விண்வெளிக்கு ராக்கெட் வெற்றிகரமாக பாய்ந்தது.
பூமியில் இருந்து 575 கிலோ மீட்டர் உயரத்தில் சீறிப்பாய்ந்த ராக்கெட் ஒரு நாள் தனது வெற்றிப்பயணத்தை முடித்துள்ள நிலையில் இன்னும் 2 நாட்களுக்கு விண்வெளியை சுற்றி வரும். பயணம் முடிந்த பிறகு, அட்லாண்டிக் கடலில் பால்கன் ராக்கெட் தரை இறங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் விண்வெளிக்கு மக்களை சுற்றுலா அனுப்பும் எலான் மஸ்க்கின் திட்டம் முதற்கட்ட வெற்றி அடைந்ததை தொடர்ந்து புதிய வரலாற்றையும் படைத்துள்ளது.