ஆர்ஜென்டினாவில் தலைவிரித்தாடும் வறுமை மற்றும் வேலையில்லா திண்டாட்டம் - பல்லாயிரக்கணக்கான மக்கள் வீதியில் திரண்டு போராட்டம்
Sep 17 2021 12:08PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ஆர்ஜென்டினாவில் வேலை வாய்ப்பின்மை மற்றும் வறுமையால் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கும் பல்லாயிரக்கணக்கான மக்கள் வீதிகளில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தென் அமெரிக்க நாடுகளில் ஒன்றான ஆர்ஜென்டினாவில், கடந்த சில ஆண்டுகளாக வேலையில்லாத் திண்டாட்டம் நிலவி வருகிறது. மேலும், கொரோனா ஊரடங்கு காரணமாக நாட்டில் வறுமையும் ருத்ர தாண்டவமாடி வருகிறது. நாட்டில் நிலவும் இந்த முக்கிய பிரச்னைகளுக்கு தீர்வு காணாமல் அரசு மெத்தனம் காட்டுவதாக அந்நாட்டு மக்கள் குற்றம் சாட்டி பல கட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் தொடர்ச்சியாக, தலைநகர் பியூனஸ் அயர்ஸ் பகுதியில், பல்லாயிரக்கணக்கான மக்கள் மாபெரும் பேரணி நடத்தினர். நாடு கடும் பொருளாதார சரிவை சந்தித்துள்ளதாகக் கூறி, பிரமாண்ட கண்டன பதாகைகளை ஏந்தியவாறு மக்கள் பேரணியில் சென்றனர். இந்தப் போராட்டத்தால், தலைநகரின் முக்கிய சாலைகள், மக்கள் கூட்டத்தால் ஸ்தம்பித்தன.
ஆர்ஜென்டினாவில், 42 சதவீத மக்கள் வறுமையாலும், 10 சதவீத மக்கள் வேலை வாய்ப்பின்மையாலும் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.