இலங்கையில் அக்.1-ம் தேதி வரை பொதுமுடக்கம் நீட்டிப்பு
Sep 17 2021 6:22PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
இலங்கையில் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக அக்டோபர் ஒன்றாம் தேதி வரை பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் தினசரி கொரோனா பாதிப்பு இரண்டாயிரத்தை தாண்டி பதிவாகி வருகிறது. இதையடுத்து கொரோனா பரவலை தடுப்பது குறித்து அதிபர் கோத்தபய ராஜபட்சே தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. அதில், கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக அக்டோபர் ஒன்றாம் தேதி வரை பொதுமுடக்கத்தை நீடித்து உத்தரவிடப்பட்டுள்ளது.