நவம்பர் ஒன்றில் கிளாஸ்கோவில் நடக்கும் பருவநிலை மாநாட்டில் ராணி இரண்டாம் எலிசபெத் பங்கேற்க மாட்டார் - பக்கிங்ஹாம் அரண்மனை திட்டவட்டம்
Oct 27 2021 7:40AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கிளாஸ்கோ பருவநிலை மாநாட்டில் ராணி இரண்டாம் எலிசபெத் பங்கேற்க மாட்டார் என இங்கிலாந்தின் பக்கிங்ஹாம் அரண்மனை அறிவித்துள்ளது.
நவம்பர் ஒன்றாம் தேதி கிளாஸ்கோவில் தொடங்கும் பருவநிலை மாநாட்டில் இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் பங்கேற்று உரையாற்றுவார் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், கிளாஸ்கோ பருவநிலை மாநாட்டில் ராணி இரண்டாம் எலிசபெத் பங்கேற்க மாட்டார் என இங்கிலாந்தின் பக்கிங்ஹாம் அரண்மனை அறிவித்துள்ளது. இதுதொடர்பாக பக்கிங்ஹாம் அரண்மனை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், மருத்துவர்களின் ஆலோசனையின்படி ராணி இரண்டாம் எலிசபெத் ஓய்வு எடுக்க வேண்டிய சூழல் உள்ளதால், அவர் கிளாஸ்கோ பருவநிலை மாநாட்டில் பங்கேற்கமாட்டார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 95 வயதான ராணி இரண்டாம் எலிசபெத், கடந்த வாரம் மருத்துவமனையில் வழக்கமான சோதனையில் ஈடுபட்டு, தற்போது வின்ஸ்டர் கோட்டையில் ஓய்வு எடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.