மெக்சிகோவில் போதைப்பொருள் கும்பல்களுக்கு இடையே வன்முறை - 6 பேர் பலி : மரத்தின் மீதும், பாலத்தின் மீதும் உடல்கள் தொங்கவிடப்பட்ட கொடூரம்

Nov 24 2021 5:00PM
எழுத்தின் அளவு: அ + அ -

மெக்‍சிகோவில், போதைப்பொருள் கடத்தல் கும்பல்களுக்‍கு இடையே நடைபெற்ற மோதலில், 6 பேர் கொல்லப்பட்ட நிலையில், அவர்களது உடலை பாலத்தின் மீதும், மரத்தில் தொங்கவிடப்பட்ட சம்பவம், பொதுமக்‍களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய மெக்‍சிகோவின் Zacatecas மாகாணத்தில், கடந்த 18ம் தேதி, போதைப்பொருள் கடத்தல் கும்பல்களுக்‍கிடையே நடைபெற்ற வன்முறையில், 10 பேர் கொல்லப்பட்டனர். அதில் 8 பேரின் உடல்கள் பாலத்தின் மீது கட்டி தொங்கவிடப்பட்டிருந்தன. இதுகுறித்து அம்மாகாண போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வரும் சூழலில், மற்றுமொரு கோர சம்பவம் அங்கு நிகழ்ந்துள்ளது. போதைப்பொருள் கும்பல்களுக்‍கு இடையே மீண்டும் நடைபெற்ற மோதலில், 6 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் 3 பேரின் உடல்கள் பாலத்தின் மீதும், மற்ற 3 பேரின் உடல்கள் மரத்தின் மீதும் தொங்கவிடப்பட்டிருந்தன. இது போலீசார் மற்றும் பொதுமக்‍களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

போதைப்பொருள் கும்பல்களுக்‍கிடையே நடைபெற்ற மோதலில் இந்த ஆண்டு மட்டும் 948 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த ஆண்டைக்‍ காட்டிலும் இம்முறை கூடுதலாக 342 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00