மெக்சிகோவில் போதைப்பொருள் கும்பல்களுக்கு இடையே வன்முறை - 6 பேர் பலி : மரத்தின் மீதும், பாலத்தின் மீதும் உடல்கள் தொங்கவிடப்பட்ட கொடூரம்
Nov 24 2021 5:00PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
மெக்சிகோவில், போதைப்பொருள் கடத்தல் கும்பல்களுக்கு இடையே நடைபெற்ற மோதலில், 6 பேர் கொல்லப்பட்ட நிலையில், அவர்களது உடலை பாலத்தின் மீதும், மரத்தில் தொங்கவிடப்பட்ட சம்பவம், பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய மெக்சிகோவின் Zacatecas மாகாணத்தில், கடந்த 18ம் தேதி, போதைப்பொருள் கடத்தல் கும்பல்களுக்கிடையே நடைபெற்ற வன்முறையில், 10 பேர் கொல்லப்பட்டனர். அதில் 8 பேரின் உடல்கள் பாலத்தின் மீது கட்டி தொங்கவிடப்பட்டிருந்தன. இதுகுறித்து அம்மாகாண போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வரும் சூழலில், மற்றுமொரு கோர சம்பவம் அங்கு நிகழ்ந்துள்ளது. போதைப்பொருள் கும்பல்களுக்கு இடையே மீண்டும் நடைபெற்ற மோதலில், 6 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் 3 பேரின் உடல்கள் பாலத்தின் மீதும், மற்ற 3 பேரின் உடல்கள் மரத்தின் மீதும் தொங்கவிடப்பட்டிருந்தன. இது போலீசார் மற்றும் பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
போதைப்பொருள் கும்பல்களுக்கிடையே நடைபெற்ற மோதலில் இந்த ஆண்டு மட்டும் 948 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த ஆண்டைக் காட்டிலும் இம்முறை கூடுதலாக 342 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.