கொலம்பியாவில் ரூ.2,250 கோடி மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் : 2 போதைப்பொருள் ஆய்வகங்கள் அழிப்பு
Nov 24 2021 5:08PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கொலம்பியாவில், சுமார் 2 ஆயிரத்து 250 கோடி ரூபாய் மதிப்பிலான போதைப்பொருளை, அந்நாட்டு ஆயுதப் படையினர் பறிமுதல் செய்ததுடன், 2 போதைப்பொருள் ஆய்வகங்களையும் அழித்துள்ளனர்.
கொலம்பியாவின் Nairno மாகாணத்தில் உள்ள சமநீகோ நகராட்சியில், சட்டவிரோதமாக 2 போதைப்பொருள் ஆய்வகங்கள் செயல்பட்டு வந்துள்ளன. இதுகுறித்த தகவலின் பேரில், அந்நாட்டு ஆயுதப்படையினர் போதைப்பொருள் ஆய்வங்கள் செயல்படும் இடங்களில், துப்பாக்கி ஏந்தியபடி சோதனை மேற்கொண்டனர். அப்போது 10 ஆயிரம் கிலோ எடையுள்ள போதைப்பொருளை அவர்கள் பறிமுதல் செய்தனர். பின்னர் அந்த 2 ஆய்வகங்களையும் ஆயுதப்படைப் படையினர் அழித்தனர். பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருளின் மதிப்பு 300 மில்லியன் அமெரிக்க டாலர்கள் என கணக்கிடப்பட்டுள்ளது. அதாவது இந்திய மதிப்பில் சுமார் 2 ஆயிரத்து 250 கோடியாகும்.
கொலம்பியாவில் ராணுவத்தினர் மற்றும் போலீசார் கடந்த ஆண்டு மட்டும் நடத்திய சோதனையில், 505 டன் போதைப்பொருட்களை பறிமுதல் செய்தது குறிப்பிடத்தக்கது.