பிரிட்டனில் 2 பேருக்கு ஒமைக்ரான் கொரோனா தொற்று : புதிய கொரோனா கட்டுப்பாடுகள் அமல் - மேலும் 4 நாடுகளுக்கு பயணத் தடை
Nov 28 2021 1:56PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
பிரிட்டனில் ஒமைக்ரான் உருமாற்றக் கொரோனா பரவத் தொடங்கியுள்ளதால், அங்கு புதிய கொரோனா கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன.
ஆப்பிரிக்க நாடானா போட்ஸ்வானாவில் பரவத் தொடங்கிய ஓமைக்ரான் உருமாற்றக் கொரோனா, பல நாடுகளுக்கும் பரவத் தொடங்கியுள்ளது. பிரிட்டனில் இரண்டு பேருக்கு ஓமைக்ரான் கொரோனா தொற்று பரவியுள்ளது. இதனால் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. பிரிட்டனுக்கு வரும் வெளிநாட்டுப் பயணிகள் அனைவரும் பிசிஆர் சோதனை மேற்கொள்ள வேண்டும் என்றும், கொரோனா இல்லை என்பதை உறுதி செய்யும் வரை தனிமைப்படுத்திக் கொண்டு இருக்க வேண்டும் என்றும் பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்தார். South Africa, Botswana, Lesotho, Eswatini உள்ளிட்ட நாடுகளுக்கு ஏற்கனவே பயணத் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், Angola, Mozambique, Malawi, Zambia ஆகிய மேலும் 4 நாடுகளுக்கு பயணத் தடை விதிக்கப்பட்டுள்ளது.