ரஷ்யாவில் நிலக்கரி சுரங்கத்தில் ஏற்பட்ட பயங்கர வெடிவிபத்து : 11 பேர் பலி
Nov 28 2021 3:16PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ரஷ்யாவில் உள்ள நிலக்கரி சுரங்கத்தில் ஏற்பட்ட பயங்கர வெடிவிபத்தில் 11 பேர் உயிரிழந்தனர். இடுபாடுகளில் சிக்கி உள்ள 25-க்கும் மேற்பட்டோரை மீட்கும் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது.
ரஷ்யாவின் சைபீரியாவை அடுத்த Kemerovo மாகாணத்தில் உள்ள BELOVO நகரில் நிலக்கரி சுரங்கம் ஒன்று இயங்கி வருகிறது. இன்று அதிகாலையில் நிலக்கரி சுரங்கத்தில் பயங்கர வெடி விபத்து நிகழ்ந்தது. இந்த வெடிவிபத்தில் 11 பேர் உயிரிழந்ததாக முதற்கட்ட தகவல் வெளியாகிவுள்ளன. மேலும் இடிபாடுகளில் 25-க்கும் மேற்பட்டவர்கள் சிக்கி இருக்கக்கூடுமென கருதப்படுவதால், அவர்களை மீட்கும் பணியில் அந்நாட்டு தேசிய பேரிடர் மீட்பு படையினர் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடுமென அஞ்சப்படுகிறது.