பயணத் தடைகள் மூலமாக மட்டுமே ஒமைக்ரான் தொற்று பரவலை தடுத்து விட முடியாது - உலகளாவிய சுகாதார முயற்சிகளை மோசமாக பாதிக்கும் என உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை
Dec 1 2021 1:28PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
பயணத் தடைகள் மூலம் ஒமைக்ரான் தொற்று பரவலை தடுத்து நிறுத்திவிட முடியாது என்றும், அத்தகைய தடைகளால் உலகளாவிய சுகாதார முயற்சிகள் மோசமாக பாதிக்கும் என்றும் உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
ஒமைக்ரன் கொரோனா பாதிப்பு உள்ள நாடுகளை சேர்ந்த மக்கள் தங்கள் நாடுகளுக்கு வருவதை தடுக்க, சில நாடுகள் பயணத் தடை விதித்துள்ளன. இந்நிலையில் ஒமைக்ரான் பாதிப்புள்ள தென்னாப்பிரிக்கா, சீனா, நியூஸிலாந்து, ஹாங்காங், பிரிட்டன், பிரசில், வங்கதேசம், போட்ஸ்வானா, மோரீஷஸ், ஜிம்பாப்வே, சிங்கப்பூா், இஸ்ரேல் உள்ளிட்ட நாட்டு மக்களுக்கு பயணத் தடைகள் விதிப்பதன் மூலம் ஒமைக்ரான் தொற்று பரவலை தடுத்து நிறுத்திவிட முடியாது என்று உலக சுகாதார அமைப்பு கூறியுள்ளது. பயணத் தடைகளால், மக்களின் வாழ்வாதாரம் பெரும் சுமையாக மாறிவிடும் என்றும், உலகளாவிய சுகாதார முயற்சிகளை மோசமாக பாதிக்கும் என்றும் தெரிவித்துள்ளது. எதிர்காலத்தில் நோய்த் தொற்றுக்களை எதிர்த்துப் போராட சர்வதேச உடன்படிக்கை அவசியம் என்றும் உலக சுகாதார நிறுவனம் வலியுறுத்தியுள்ளது.