போட்டோசூட் விவகாரம் - பாக். தூதரிடம் இந்தியா அதிருப்தி
Dec 1 2021 6:02PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
பாகிஸ்தானின் கர்தார்பூரில் உள்ள சீக்கிய புனித தலமான குருத்வாரா தர்பார் சாஹிப் அருகே, பாகிஸ்தான் மாடல் ஒருவர், போட்டோசூட் நடத்தியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், அந்நாட்டு தூதரை நேரில் அழைத்து இந்தியா தனது அதிருப்தியைத் தெரிவித்துள்ளது. நேற்று முன்தினம் பாகிஸ்தானின் கர்தார்பூரில் உள்ள குருத்வாரா தர்பார் சாஹிப்பின் முன்பு பாகிஸ்தான் மாடல் Sauleha என்பவர் போட்டோசூட் நடத்தி, அதன் படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டிருந்தார். இதற்கு பலரும் எதிர்ப்புகளைப் பதிவு செய்த நிலையில், Sauleha தனது செயலுக்கு மன்னிப்பைக் கேட்டிருந்தார்.