பாகிஸ்தானின் லாகூர் நகர சந்தையில் குண்டுவெடிப்பு - 3 பேர் பலி ; 20க்கும் மேற்பட்டோர் காயம்
Jan 21 2022 7:36AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
பாகிஸ்தானின் லாகூர் நகரில் உள்ள சந்தையில், சக்திவாய்ந்த வெடிகுண்டு வெடித்ததில், 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 20க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.
லாகூரின் Pan Mandi-ல் உள்ள Anarkali சந்தையில், இந்திய பொருட்கள் விற்பனை செய்யப்படும் இடத்திற்கு அருகே, வெடிகுண்டு வெடித்ததாக கூறப்படுகிறது. இதில் 3 பேர் உயிரிழந்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், படுகாயமடைந்த 20க்கும் மேற்பட்டோரை மீட்டு, மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த வெடிவிபத்தில் தீவிரவாதிகளின் சதி உள்ளதா? என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.