வடக்கு கென்யாவில் இரட்டை குட்டிகளை ஈன்ற யானை - அதிசய நிகழ்வு என வனவிலங்கு ஆர்வலர்கள் கருத்து
Jan 21 2022 3:07PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கென்யாவில் உள்ள உயிரியல் பூங்காவில், பெண் யானை ஒன்று இரட்டை குட்டிகளை ஈன்றுள்ளது.
யானைகள் இரட்டை குட்டிகளை ஈன்றெடுக்கும் அபூர்வ நிகழ்வு எப்போதாவது நடக்கும். 80 ஆண்டுகளுக்கு பிறகு கடந்த ஆண்டு இலங்கையை சேர்ந்த பெண் யானை, இரட்டை குட்டிகளை ஈன்றது. இந்நிலையில், வடக்கு கென்யாவின் SAMBURU பகுதியில் உள்ள தேசிய வன உயிரின பூங்காவில் பராமரிக்கப்பட்டு வந்த Bora என்ற பெண் யானை, அண்மையில் இரட்டை குட்டிகளை ஈன்றுள்ளது. 2 யானைக் குட்டிகளையும், தாய் யானை அன்புடன் அரவணைத்து வருகிறது. இரட்டை யானைக்குட்டிகள் ஈன்றெடுப்பது ஒரு அதிசய நிகழ்வு என்று வனவிலங்கு ஆர்வலர்கள் கூறியுள்ளனர்.