போலந்து நாட்டில் கொரோனா தடுப்பூசி செலுத்தினால் மட்டுமே உணவு வழங்கப்படும் - கடும் கட்டுப்பாடுகளை செயல்படுத்தும் உணவகங்கள்

Jan 21 2022 6:39PM
எழுத்தின் அளவு: அ + அ -

கொரோனா தடுப்பூசி செலுத்தினால் மட்டுமே உணவு வழங்கப்படும் என போலந்து நாட்டு உணவகங்கள் கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளன.

ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான போலந்தில் தினசரி கொரோனா பாதிப்பு 30 ஆயிரத்தை தாண்டியுள்ள நிலையில், தொற்று பரவலைக்‍ கட்டுப்படுத்த அரசு கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. போலந்தில் சுமார் 56 சதவிதம் பேர்களுக்கே கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இது ஐரோப்பிய ஒன்றிய அளவில் சராசரியை விட மிகக் குறைவாக கருதப்படுகிறது.

இந்நிலையில், தடுப்பூசி போட்டுள்ள வாடிக்கையாளர்களை மட்டுமே அனுமதிப்பதன் மூலம் கொரோனா தொற்றில் இருந்து பாதுகாக்க முடியும் என WARSAW நகரில் செயல்படும் உணவகங்கள் முடிவு செய்துள்ளன. இந்த கட்டுப்பாடுகளுக்‍கு எதிர்ப்புகள் எழுந்தாலும், வழக்கமான வாடிக்கையாளர்கள் ஏற்றுக் கொண்டுள்ளதாக உணவக உரிமையாளர் தெரிவித்துள்ளார். வாடிக்கையாளர்கள் தங்கள் தடுப்பூசி சான்றிதழ்களை உணவகங்கள், கஃபேக்கள் மற்றும் பிற இடங்களில் காண்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். இதுபோன்ற நடவடிக்கை தடுப்பூசி போடுபவர்களின் எண்ணிக்கையை 10 சதவிகிதம் அதிகரிக்கும் என்று அந்நாட்டு மருத்துவக்குழு தெரிவித்துள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00