பாகிஸ்தானில் நடந்த குண்டுவெடிப்புக்கு பிரதமர் இம்ரான்கான் கடும் கண்டனம்
Jan 21 2022 3:26PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
பாகிஸ்தான் நாட்டின் பஞ்சாப் மாகாணத் தலைநகர் லாகூர் நகர பொதுமக்கள் அதிகம் கூடும் சந்தை ஒன்றில் இந்த குண்டுவெடிப்பு நடந்துள்ளது. இருசக்கர வாகனம் ஒன்றில் வைக்கப்பட்டிருந்த வெடிகுண்டு வெடித்துச் சிதறியதாகவும், அப்போது அங்கே நிறுத்தப்பட்டிருந்த ஏராளமான வாகனங்கள் மற்றும் கட்டடங்களுக்குப் பாதிப்பு ஏற்பட்டதாகவும், சம்பவத்தை நேரில் பார்த்த பொதுமக்கள் அச்சத்துடன் தெரிவித்துள்ளனர். சம்பவ இடத்துக்கு உடனடியாக விரைந்த போலீசார் மற்றும் மீட்புப் படையினர், உயிரிழந்த 3 பேரின் உடல்களை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பிவைத்தனர். காயமடைந்த 26 பேருக்கு அருகில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. இந்நிலையில், இந்த குண்டுவெடிப்புக்கு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான், அதிபர் அரிஃப் அல்வி ஆகியோர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.