உக்ரைனில் பெரும் எண்ணிக்கையிலான ஆயுதங்கள் அழிப்பு : மேற்கத்திய நாடுகள் அளித்த ஆயுதங்கள் என ரஷ்யா அறிவிப்பு
May 21 2022 3:47PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
உக்ரைன் நாட்டின் கிய்வ் அருகே உள்ள ஆயுதக்கிடங்கில் இருந்த, மேற்கத்திய நாடுகள் அளித்த பெரும் எண்ணிக்கையிலான ஆயுதங்களை அழித்துவிட்டதாக ரஷ்யா அறிவித்துள்ளது.
உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா கடந்த பிப்ரவரி மாதம் 24ம் தேதி போர் தொடுத்தது. நேட்டோ அமைப்பில் உக்ரைன் சேர எதிர்ப்புத் தெரிவித்துத் தொடங்கப்பட்ட இப்போர் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், உக்ரைனுக்கு ஆதரவாக நேட்டோ நாடுகள் ஏராளமான ஆயுத உதவிகளையும், நிதி உதவிகளையும் அளித்து வருகின்றன. இப்படி அளிக்கப்பட்ட ஆயுதங்கள் உக்ரைன் நாட்டின் பல பகுதிகளில் உள்ள கிடங்குகளில் வைக்கப்பட்டுள்ளன. இதே போல் கிய்வ் நகருக்கு அருகே வைக்கப்பட்டிருந்த பெரும் எண்ணிக்கையிலான ஆயுதங்களை கடலில் இருந்து செலுத்திய ஏவுகணை மூலம் ரஷ்ய ராணுவம் அழித்துவிட்டதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.